புதன், 3 ஏப்ரல், 2013

அம்மாவின் கை பேசி

சாந்தனு உருப்படாமல் ஊர் சுற்றிக்கொண்டு சின்ன சின்ன திருட்டு என்று இருப்பவர். எட்டு பிள்ளைகளில் கடைக்குட்டி. அம்மாவின் செல்லப்பிள்ளை. சற்றே திருந்தி வரும் வேளையில் வீட்டில் ஒரு நிகழ்ச்சியில் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அம்மாவாலேயே விளக்குமாற்றால் அடித்து விரட்டப்படுகிறார். மனதுக்குப்பிடித்த அத்தை பெண் வேறு.

பல வருடங்கள் கடுமையாக உழைத்து ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து அம்மாவையும், காதலியையும் கூட வைத்துக்கொள்ள நினைக்கும் வேளையில் சில சம்பவங்களால் எதுவும் நடக்காமல் போய்விடுகிறது. என்ன சம்பவங்கள், அம்மா, காதலிக்கு என்ன ஆகிறது, சாந்தனுவுக்கு என்ன ஆகிறது என்பதை பல குழப்பங்களுக்கிடையே சொல்லி முடிக்கிறார் தங்கர்பச்சான்.

சாந்தனு நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கிறார். சில உணர்ச்சிவசமான காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்து நமக்கு எரிச்சல்தான் வருகிறது. அதிலும் வீட்டை விட்டு விரட்டப்படும் காட்சியில் சும்மாவே நிற்கிறார். பாக்கியராஜ் தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி நடித்துக்காண்பிப்பாரே அதை அப்படியே செய்திருந்தால் கூட போதும் அவ்வளவு உணர்ச்சிகரமான காட்சி. யாருக்கோ எதுவோ நடப்பது போல நிற்கிறார்.

அருமையான பாத்திர அமைப்பு அவரது முதலாளியாக நடிக்கும் இயக்குநருக்கு. அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதன் பிறகு தங்கர்பச்சானின் மனைவியாக வரும் மீனாள். அம்மாவாக நடித்தவரும் பரவாயில்லை.

இசை எடுபடவேயில்லை.

அம்மாவின் கை பேசி -- சிக்னல் சரியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக